அகில பாரத இந்து மகா சபாவின் தேசிய தலைவர் சுவாமி சக்கரபாணி மகராஜ் மயிலாடுதுறை மாயூர்நாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் கோவை முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு யாத்திரை மேற்கொண்டு வரும் சுவாமி சக்கரபாணி மகராஜ் மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலுக்கு வருகை தந்தார்.
அப்போது, கோயில் வாயிலில் அகில இந்து மகா சபாவின், தமிழக தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிலம்பாட்ட மாணவர்கள் சிலம்பம் சுற்றி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை அடுத்து, சுவாமி சக்கரபாணி மகராஜ் விநாயகர் மற்றும் மாயூரநாதர் சன்னதிகளில் சிறப்புத் தரிசனம் மேற்கொண்டார்.