தமிழக மக்களின் முன்னேற்றம் குறித்து ஆழ்ந்த சிந்தனை கொண்டவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கல்வி, இலக்கியம், நாடகம் என பல துறைகளில் முத்திரை பதித்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த தினம் இன்று.
தனது கருத்துக்களை, எவருக்கும் அஞ்சாது துணிச்சலுடன் எடுத்துரைத்தவர். மகாகவி பாரதியாரின் மீதுள்ள பற்றால் தன் பெயரையே மாற்றி அமைத்து, தமிழுணர்வுக்கும், சமூகச் சீர்திருத்தங்களுக்கும் பாரதியாரே முன்னோடி என்று, உரக்கக் கூறியவர் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
மிகுந்த தமிழுணர்வும், தமிழக மக்களின் முன்னேற்றம் குறித்து ஆழ்ந்த சிந்தனைகளும் கொண்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.