பாகுபலி படத்தின் ஒன்றாம் பாகத்தை வரும் அக்டோபர் மாதம் ரீரிலீஸ் செய்வதாக படக்குழு அறிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பாகுபலி திரைப்படம்.
இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்த நிலையில், பாகுபலி பாகம் 1 திரைப்படத்தை இந்த வருடம் அக்டோபர் மாதம் மீண்டும் வெளிவிடுவதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.