ஸ்வீடன் நாட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
உப்சாலா நகரின் வக்சலா சதுக்கத்தில் உள்ள சலூன் கடையில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. சப்தத்தைக் கேட்டு போலீசாருக்கு அங்குள்ள மக்கள் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.