திருப்பூர் காந்தி நகர் பகுதியில் பிரதான சாலையில் நடந்து சென்றவர்கள் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.
சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபக்குமார் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். தனது நண்பர்கள் இருவருடன் ஜெபக்குமார் பணிக்குச் செல்வதற்காகச் சாலையில் நடந்து சென்றார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்தவர், இவர்கள் மீது அதிவேகத்தில் மோதியதில் நால்வரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெபக்குமார், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.