சுதிர்மான் பேட்மிண்டன் தொடரிலிருந்து இந்தியா வெளியேறியது.
19-வது சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் போட்டி சீனாவின் ஜியாமென் நகரில் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், பெண்கள் இரட்டையரில் பிரியா-ஸ்ருதி மிஸ்ரா இணையும், ஆண்கள் இரட்டையரில் ஹரிகரண் அம்சகருணன்-ரூபன்குமார் ரத்தின சபாபதி கூட்டணியும் தங்கள் ஆட்டங்களில் தோல்வி கண்டனர்.
இந்திய அணி தொடர்ச்சியாகச் சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். இதன் மூலம் இந்திய அணி காலிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.