திருச்செந்தூர் அருகே வீட்டின் மேற்கூரையைப் பிரித்துப் புகுந்த கொள்ளையர்கள் தனியாக இருந்த மூதாட்டியைக் கத்தியைக் காட்டி மிரட்டித் தாக்கி தங்க நகையைப் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிமகாராஜபுரம் பகுதியில் மூதாட்டி ஜெயராணி தனியே வசித்துவருகிறார்.
இவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள் காதில் அணிந்திருந்த சுமார் 1 சவரன் தங்கக் கம்மலை வாங்கியதோடு வீட்டில் வேறு தங்கப்பொருட்கள் இருக்கிறதா எனக்கேட்டுத் தாக்கியுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.