புதுக்கோட்டையில் ஒன்றே கால் சவரன் தங்க நகைக்காகச் சொந்த சித்தி மகளைக் கொலை செய்வதருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.
திருமயம் பெருந்துறையைச் சேர்ந்த லட்சுமணன் தனது சித்தி மகள் லோகப்பிரியாவிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
திருமணமான லோகப்பிரியா தனது தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு பணம் கேட்டு தொந்தரவு கொடுத்த லட்சுமணன் அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியால் குத்திக் கொலை செய்ததோடு அவரிடம் இருந்து ஒன்றே கால் சவரன் நகையைப் பறித்துச் சென்றிருக்கிறார்.
இதுதொடர்பான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், லட்சுமணனுக்கு அதிக பட்ச தண்டனையாகத் தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி சந்திரன் உத்தரவிட்டார்.