செங்கல்பட்டு அருகே கடல் சீற்றம் காரணமாக ராட்சத குழாய்கள் கரை ஒதுங்கியதால் மீனவர்கள் அவதி அடைந்தனர்.
நெம்மேலி கடற்கரை பகுதியில் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக சுமார் ஆயிரத்து 500 மீட்டர் நீளமுள்ள குழாய்கள் பதிக்கப்பட்டன.
இந்நிலையில் கடல் சீற்றம் காரணமாக அந்த குழாய்கள் கரை ஒதுங்கியதால் நெம்மேலி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.