கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் இரட்டை குழந்தைகளை பிரசவித்த பெண் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விநாயகர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் மனைவி லட்சுமி பிரியா திருமணமாகி 12 ஆண்டுகளுக்குப்பின் கர்ப்பம் தரித்தார்.
இந்நிலையில், பிரசவத்திற்காக அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் அதீத ரத்தப் போக்கு காரணமாக மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் லட்சுமி பிரியா உயிரிழந்ததாக குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர்.