திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதுமட்டுமின்றி பல்வேறு திரைப்பட நடிகர்கள் நடிகைகள் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
அண்ணாமலையார் சன்னதி, சம்பந்த விநாயகர் சன்னதி, உண்ணாமுலை அம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பிரகாரங்களில் அவர் வழிபட்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ராகவா லாரன்ஸ் உடன் ரசிகர்கள் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.