கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனக்கு செல்போன் மூலம் மிரட்டல் அழைப்புகள் வருவதாகக் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த சித்தராமையா, தனக்குத் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக மிரட்டல்கள் வருவதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அதன் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.