நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து மீனவர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்கரைப்பேட்டை, செருதூர் உள்ளிட்ட நான்கு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தனர்.
அப்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள் படகில் இருந்த பொருட்களை பறித்து சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து மீனவர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.