தசைநார் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், கோவை டர்ஃப் மைதானத்தில் தன்னார்வ அமைப்பு சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்தி நிதி திரட்டப்பட்டது.
கோவை அடுத்த கருமத்தம்பட்டியில் நடைபெற்ற இந்த போட்டியில், திருப்பூர், ஈரோடு, சேலம், பாலக்காடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
இதில் கிடைக்கும் நிதி தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சை மற்றும் வாழ்வை மேம்படுத்த வழங்கப்படும் என, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.