நாகை மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலைக் கண்டித்து வேதாரண்யத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை, வெள்ளபள்ளம், செருதூர் ஆகிய மீனவ கிராமங்களில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற 24 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி, மீன்பிடி உபகரணங்களை பறித்துச் சென்றுள்ளனர்.
இதனைக் கண்டித்து வேதாரண்யம் தாலுகாவில் உள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
3வது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் கடற்கரை பகுதிகளில் பைபர் மற்றும் நாட்டுப்படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
கடற்கொள்ளையர்களின் தாக்குதலால் தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.