DRDO மற்றும் இந்தியக் கடற்படை இணைந்து, தரை மற்றும் கடலுக்கடியில் பயன்படுத்தக்கூடிய கண்ணிவெடியை வெற்றிகரமாகச் சோதனை செய்தது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தால் பாகிஸ்தானுக்குத் தக்க பதலடி கொடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்தியக் கடற்படை இணைந்து உருவாக்கிய கண்ணிவெடி சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட எம்ஐஜிஎம் எனப்படும் இந்த கண்ணிவெடியின் சோதனை வெற்றிகரமாக நடந்ததாகப் பாதுகாப்பு அமைச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியக் கடற்படையின் கடலுக்கடியிலான போர் திறன்கள் மேலும் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.