கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ மீது ஷூ வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு கென்யாவில் உள்ள மிகோரி கவுண்டியில் பேரணி நடந்தது. அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிவாறு சென்ற ரூட்டோ மீது ஷூ வீசப்பட்டது.
இதுதொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.