சூறைக் காற்றால் சரிந்த வாழை சாகுபடி : இழப்பீடு கிடைக்காமல் பரிதவிக்கும் விவசாயிகள்!
Jul 22, 2025, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சூறைக் காற்றால் சரிந்த வாழை சாகுபடி : இழப்பீடு கிடைக்காமல் பரிதவிக்கும் விவசாயிகள்!

Web Desk by Web Desk
May 7, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுப்பகுதியில் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்குச் சூறைக் காற்றால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம், பயிர்க் காப்பீடு திட்டத்தைச் சரிவரச் செயல்படுத்தாத காரணத்தால் போதிய இழப்பீடு கிடைக்கவில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுபற்றிய விவரங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, லிங்காபுரம், காந்தவயல், மருதூர், வெள்ளியங்காடு, தாயனூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் வாழை சாகுபடியே பிரதானமாக இருக்கிறது. வன விலங்குகள் தொல்லை, விவசாயப் பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை என பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும்,  வாழை சாகுபடியை அங்குள்ள பல விவசாயிகள்  தேர்ந்தெடுத்து உற்பத்தி செய்து வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் சுற்றுப்பகுதியைப் பொறுத்த வரை பத்தாயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.  கேரளாவில் ஓணம் பண்டிகையைக் கணக்கில் கொண்டு நேந்திரன், கதளி வாழைகள் சாகுபடி செய்துள்ளனர். மார்ச்  தொடங்கி ஜூன் வரையிலான கால கட்டத்தில்  அறுவடைக்குத் தயாராகும் விவசாயிகளுக்கு, அப்பகுதியில் வீசும் சூறைக்காற்று பெரும் பாதிப்பையும், பின்னடைவையும் ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு வாழைக்கும் 150 முதல் 300 ரூபாய் வரை செலவு செய்து அறுவடைக்கு தயார் செய்யும் விவசாயிகள், அந்த மரம் சாய்ந்ததால், அதனைத் தோட்டத்தில் இருந்து வெளியேற்றுவதற்குக் கூட கூலி கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.

சூறாவளியால் நஷ்டத்தைச் சந்தித்து வரும்  விவசாயிகளுக்கு அரசு சார்பில் எந்தவித நிவாரணமும் வழங்கப்படுவதில்லை பயிர்காப்பீட்டு திட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் அவை முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை. ஒரு தாலுக்காவில் பயிர் செய்யப்பட்ட வாழை மரங்களில் 80 சதவிகித அளவு பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே உரிய இழப்பீடு வழங்க வழிவகை உள்ளது.

வாழை பயிர் காப்பீட்டுக்காக ஏக்கருக்கு ஆறாயிரம் வரை பீரிமியம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் நிச்சயமாக இழப்பீடு கிடைக்காது என்பதால் அந்த திட்டத்தை வாழை விவசாயிகள் தேர்ந்தெடுப்பதே இல்லை. எனவே வாழைக்கான பயிர் காப்பீடு திட்டத்தில் மாற்றங்களை அரசு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags: Banana cultivation collapsed due to gale force winds: Farmers are suffering without receiving compensation
ShareTweetSendShare
Previous Post

140 கோடி இந்தியர்களின் சிகரமாக பிரதமர் மோடி விளங்குகிறார் : நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Next Post

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவே ஆப்ரேஷன் சிந்தூர் : விங் கமாண்டர் வியோமிகா சிங்

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!

விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

அசோக்குமார் வெளிநாடு செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு!

தேனாம்பேட்டை அருகே திமுக அரசை கண்டித்து ஆய்வக நுட்பனர் கைது!

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் : அண்ணாமலை

திருவண்ணாமலை : தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies