சூறைக் காற்றால் சரிந்த வாழை சாகுபடி : இழப்பீடு கிடைக்காமல் பரிதவிக்கும் விவசாயிகள்!
Jan 14, 2026, 10:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சூறைக் காற்றால் சரிந்த வாழை சாகுபடி : இழப்பீடு கிடைக்காமல் பரிதவிக்கும் விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
May 7, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுப்பகுதியில் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்குச் சூறைக் காற்றால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம், பயிர்க் காப்பீடு திட்டத்தைச் சரிவரச் செயல்படுத்தாத காரணத்தால் போதிய இழப்பீடு கிடைக்கவில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுபற்றிய விவரங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, லிங்காபுரம், காந்தவயல், மருதூர், வெள்ளியங்காடு, தாயனூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் வாழை சாகுபடியே பிரதானமாக இருக்கிறது. வன விலங்குகள் தொல்லை, விவசாயப் பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை என பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும்,  வாழை சாகுபடியை அங்குள்ள பல விவசாயிகள்  தேர்ந்தெடுத்து உற்பத்தி செய்து வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் சுற்றுப்பகுதியைப் பொறுத்த வரை பத்தாயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.  கேரளாவில் ஓணம் பண்டிகையைக் கணக்கில் கொண்டு நேந்திரன், கதளி வாழைகள் சாகுபடி செய்துள்ளனர். மார்ச்  தொடங்கி ஜூன் வரையிலான கால கட்டத்தில்  அறுவடைக்குத் தயாராகும் விவசாயிகளுக்கு, அப்பகுதியில் வீசும் சூறைக்காற்று பெரும் பாதிப்பையும், பின்னடைவையும் ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு வாழைக்கும் 150 முதல் 300 ரூபாய் வரை செலவு செய்து அறுவடைக்கு தயார் செய்யும் விவசாயிகள், அந்த மரம் சாய்ந்ததால், அதனைத் தோட்டத்தில் இருந்து வெளியேற்றுவதற்குக் கூட கூலி கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.

சூறாவளியால் நஷ்டத்தைச் சந்தித்து வரும்  விவசாயிகளுக்கு அரசு சார்பில் எந்தவித நிவாரணமும் வழங்கப்படுவதில்லை பயிர்காப்பீட்டு திட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் அவை முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை. ஒரு தாலுக்காவில் பயிர் செய்யப்பட்ட வாழை மரங்களில் 80 சதவிகித அளவு பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே உரிய இழப்பீடு வழங்க வழிவகை உள்ளது.

வாழை பயிர் காப்பீட்டுக்காக ஏக்கருக்கு ஆறாயிரம் வரை பீரிமியம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் நிச்சயமாக இழப்பீடு கிடைக்காது என்பதால் அந்த திட்டத்தை வாழை விவசாயிகள் தேர்ந்தெடுப்பதே இல்லை. எனவே வாழைக்கான பயிர் காப்பீடு திட்டத்தில் மாற்றங்களை அரசு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags: Banana cultivation collapsed due to gale force winds: Farmers are suffering without receiving compensation
ShareTweetSendShare
Previous Post

140 கோடி இந்தியர்களின் சிகரமாக பிரதமர் மோடி விளங்குகிறார் : நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Next Post

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவே ஆப்ரேஷன் சிந்தூர் : விங் கமாண்டர் வியோமிகா சிங்

Related News

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

Load More

அண்மைச் செய்திகள்

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies