மண்டூக முனிவருக்குச் சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை வந்தடைந்த கள்ளழகரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 8ஆம் தேதி விமரிசையாகத் தொடங்கியது.
நாள்தோறும் கள்ளழகருக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், கள்ளழகர் வேடம் பூண்டு, மண்டூக முனிவருக்குச் சாப விமோசனம் அளிப்பதற்காகத் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி சுந்தராகப் பெருமாள் மதுரை நோக்கிப் புறப்பட்டார்.
பின்னர், மூன்று மாவடி பகுதிக்குக் கண்டாங்கி பட்டுடுத்தித் தங்கப் பல்லக்கில் வந்த கள்ளழகருக்குப் பிரம்மாண்டமாக எதிர்வை ந நடைபெற்றது.
அப்போது, கருப்பசாமி வேடமிட்டு ஆடல் பாடல்களுடன் கள்ளழகரைப் பக்தர்கள் வரவேற்றனர். மாநகர் பகுதிக்குள் நுழைந்த கள்ளழகரை மனம் குளிர்வித்து வரவேற்கும் வகையில் தோல் பைகளால் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து வரவேற்றனர்.