நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயின்ற 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தோ்வு பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெற்றன.
இந்த நிலையில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டது. நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய தேர்வில் 93.6 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவில், 98.71 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 4-வது இடத்தில் உள்ளது. வழக்கம்போல் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகள் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.