திருப்பதி திருமலையில் 10 லட்சம் முறை கோவிந்தா நாமத்தை எழுதி வந்த இளம் பெண் உட்பட 3 பேருக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்பட்டது.
இளைஞர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வுக்காகவும், சனாதன தர்மத்தின் மீதான பக்தியை வளர்க்கவும், 10 லட்சம் முறை கோவிந்தா நாமத்தை எழுதி வரும் 25 வயதுக்குட்பட்ட பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும் எனத் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
அதன்படி 10 லட்சத்து ஆயிரத்து 116 முறை கோவிந்தா நாமம் எழுதி வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா உட்பட 3 பேருக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்பட்டுள்ளது.