கோவை மாவட்டம் குறும்பாளையம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தைக் கையகப்படுத்த அன்னூர் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறும்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் வரை நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆட்சேபனை மனுக்கள் அளித்தனர்.
அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில், சாலை விரிவாக்கத்தில் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, பசுமை வழிச்சாலை திட்டத்தைக் கைவிட வலியுறுத்தினர்.