ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நாய்களை விஷம் வைத்துக் கொன்ற சம்பவத்தில் தோட்ட பணியாளரை போலீசார் கைது செய்தனர்.
பாஜக நிர்வாகியாக இருப்பவர் கலைவாணி. இவரது கணவர் பாஸ்கர். இவர்கள் வீட்டில் வளர்த்து வந்த வளர்ப்பு நாய்களில் ஒரு நாய் மர்மமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மற்றொரு நாய் சோர்வாகக் காணப்பட்டது.
மேலும் இரண்டு வளர்ப்பு நாய் மாயமாகி இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் பழனிச்சாமி என்பவர் கோழிக்கறியில் குருணை மருந்து கலந்து கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். நாய்கள், கோழிகளைக் கடித்ததால் இவ்வாறு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.