பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு கேட் சரிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.
கிணத்துக்கடவு அடுத்த அரசம்பாளையம் பகுதியில் தனியார் காஸ்டிங் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் பின் பகுதியில் உள்ள குடோனில் இரும்பு கேட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
அப்போது கேட் சரிந்து விழுந்ததில் வடமாநில தொழிலாளி உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்தில் கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தினர்.