புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனை எடுத்து வந்த அமெரிக்கப் பெண் மருத்துவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத்துக்குப் பயணம் மேற்கொள்ள இருந்த அமெரிக்க பெண் மருத்துவர் ரேச்சல் ஆனியின் உடைமைகளில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன் இருந்தது சோதனையில் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து சேட்டிலைட் போனை பறிமுதல் செய்த போலீசார், ரேச்சல் ஆனி மீது வழக்குப்பதிவு செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.