கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கனமழையால் சிக்கித் தவித்த மக்களைத் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
மேலும் அத்தியாவசிய பொருட்களின்றி வீடுகளுக்குள்ளேயே மக்கள் சிக்கித் தவித்தனர். அவர்களை ரப்பர் படகு மூலம் பாதுகாப்பான இடத்திற்குத் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக அழைத்துச் சென்றனர்.