இந்தியாவுடனான அனைத்து வர்த்தக பிரச்சனைகளையும் தீர்க்க விரும்புவதாக வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகரான ஷேக் பஷீருதின் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்திலிருந்து ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது.
இந்நிலையில், இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு இடைக்கால அரசின் ஆலோசகர் ஷேக் பஷீருதின், இந்தியாவுடனான வர்த்தக பிரச்சனைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.