கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 250-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும். தற்போதைய சூழலை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.