மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடருக்கான தகுதி சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.
மொத்தம் ரூ.4 கோடி பரிசுத் தொகைக்கான மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று முதல் 25-ம் தேதி வரை நடக்கிறது.
ஆண்களுக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். சக நாட்டவர்களான சங்கர் சுப்பிரமணியன், தருண் மன்னிபல்லி ஆகியோர் தோல்வி அடைந்தனர். இதேபோல் பெண்களுக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் அன்மோல் கார்ப் தோல்வியடைந்தார்.