நெல்லை மாவட்டம் வள்ளியூரில் டாஸ்மாக் பாரில் இரவு 10 மணிக்கு மேல் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஏர்வாடி செல்லும் சாலையில் செயல்பட்டுவரும் டாஸ்மாக் பாரில் இரவு 10 மணிக்கு மேல் மது விற்பனை செய்யும் வீடியோ வைரலானது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் மது விற்பனை செய்த கேரளாவைச் சேர்ந்த மனோஜ் என்பவரைக் கைது செய்தனர்.