சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.
தொடர் கனமழை காரணமாக குய்சோ மாகாணத்தில் உள்ள சாங்ஷி மற்றும் குவோவா நகரங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
















