காரைக்காலில் இருந்து தமிழகத்திற்கு ரேஷன் அரிசி கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டி.ஆர்.பட்டினத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தைச் சோதனை செய்ததில் புதுச்சேரி ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் அரிசி முட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து
500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீசார், ரைஷ் மில் நடத்தும் குமரேசன், செந்தில் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.