ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.
யூத எதிர்ப்பு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி, ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக, உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை அமைச்சகம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், வெளிநாட்டு மாணவர்களைப் பல்கலைக் கழகத்தில் சேர்ப்பது ஒரு சலுகையோ, உரிமையோ அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் இந்த அறிவிப்பு பழிவாங்கும் நடவடிக்கை என்றும், சர்வதேச மாணவர் திட்டங்களை அச்சுறுத்துவதாகவும், ஹார்வர்டு பல்கலைக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.