கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!
Sep 18, 2026, 02:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 19, 2026, 04:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு படைகளுக்கு இடையே 20 நாட்களாக போர் நீடித்த வருகிறது. ஈரானின் முக்கிய தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர்களான அயதுல்லா அலி கமேனி, அலி லாரிஜானி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.

ஈரானின் எண்ணெய் நிலைகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு நிலையமான LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், சர்வதேச அளவில் எரிவாயு தடுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, நாட்டின் இறையாண்மை மீது ஈரான் நேரடியாக தாக்குதல் நடத்தியுள்ளதாக கத்தார் அரசு கொந்தளித்துள்ளது. LNG ஆலையை ஈரான் தாக்கியதால் கத்தாரில் உள்ள தூதரக அதிகாரிகள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கத்தாருக்கு ஆதரவாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் குரல் கொடுத்துள்ளதால், 3ஆம் உலக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஈரானின் எண்ணெய் வளங்கள் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஈரானின் எரிவாயு ஆலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது, அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தெரியாது எனவும் கூறியுள்ளார். ஈரான் தாக்குதலால் ஆத்திரமடைந்து இஸ்ரேல் எடுத்த தனிப்பட்ட முடிவு என விளக்கமளித்துள்ளார்.

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக கத்தார் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது தவறான முடிவு என்றும், ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் முழு பார்ஸ் மாகாணமும் வெடிக்கச் செய்யப்படும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: iran attack uaeiran attackediran attack dubaiiran uae attackiran attack on dubaius attacks iranQatariran attacks dubaiiran attack israelus israel iran attackisrael iran attackworld's largest LNG production facility attackediran attackIran's missile attackiran attacks
Share
Tweet
SendShare
Previous Post

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

Next Post

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

Related News

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Load More

அண்மைச் செய்திகள்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies