இந்தியத் துணைக்கண்டத்தில் செயல்படும் அல்-கொய்தா (AQIS) தீவிரவாத அமைப்பின் வலையமைப்பில் தொடர்புடையதாகக் கூறப்படும் வழக்கில், கோவையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் மக்சூத் அலியை உத்தரப் பிரதேச பயங்கரவாதத் தடுப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
அல்-கொய்தாவைச் சேர்ந்த சிலர், தேசவிரோத நடவடிக்கைகளைத் திட்டமிட சமூக வலைதளங்களில் குழுக்களை உருவாக்கி வருவதாக உத்தரப் பிரதேச பயங்கரவாதத் தடுப்புப் படைக்கு உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், கடந்த 12-ம் தேதி முகமது நபீல் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தமிழக பயங்கரவாதத் தடுப்புப் படையின் உதவியுடன் கோவையைச் சேர்ந்த மக்சூத் அலி கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 14-ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் கைது செய்யப்பட்ட அவர், உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் கூறியுள்ளனர்.
















