பொறியாளர் தின விழாவை முன்னிட்டு 70-க்கும் மேற்பட்ட இளம் பொறியாளர்களுக்கு தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பாரத ரத்னா விருது பெற்ற எம்.விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வேளச்சேரியில் தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் பொறியாளர் தின விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இளம் தலைமுறை பொறியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு 70-க்கும் மேற்பட்ட இளம் பொறியாளர்களைத் தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷனின் புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். பின்னர் பேட்டியளித்த அந்த அமைப்பின் தலைவர் திருஞானசம்பந்தம், கட்டுமான பொறியாளர்களுக்கென தனியாக கவுன்சில் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
















