பாரதப் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் முன்னெடுக்கப்பட்ட பணிகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துவோம் என தமிழக பாஜக மாநிலதலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து பதிவில் கூறியுள்ளதாவது :, “தமிழ்நாட்டின் வளர்ச்சியும், வளர்ந்த தமிழ்நாட்டை உருவாக்குவதும் எங்களின் முக்கியக் குறிக்கோள்” என்று கூறியதோடு நில்லாது, கடந்த 12 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக தமிழகத்திற்கு ₹14 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதியை வழங்கியுள்ளார் நமது பாரதப் பிரதமர்.
பெண்களின் முன்னேற்றத்திற்கான விலையில்லா சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் (Ujjwala scheme), வீடுதோறும் குடிநீர் வழங்கும் திட்டம் (Jal Jeevan scheme); இளைஞர்களுக்கான புதிய தொழில் தொடக்கத் திட்டம் (Startup India); மக்களின் மருத்துவப் பாதுகாப்பிற்கான அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (Ayushman Bharat scheme); தொழில்முனைவோருக்கான சிறு தொழில் கடன் திட்டம் (MUDRA); ஏழை மக்களுக்கான பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் (Pradhan Mantri Awas Yojana); விவசாயிகளுக்கான பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டம் (PM-KISAN) போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வந்தே பாரத் ரயில்கள, பிராந்திய விமானப் போக்குவரத்து திட்டம் (UDAN), சாலை மற்றும் ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாடு, விண்வெளி அறிவியல் சாதனைகள் என நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
இந்த மக்கள் நலப் பணிகளையும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களையும் நினைவுகூரும் வகையில், இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் “ஆசீர்வாத தீபம்” ஏற்றி, பிரதமரின் பொது சேவைக்கு நமது நன்றியைத் தெரிவிப்போம். ஒன்றிணைந்து ஒளியேற்றுவோம்! வளர்ந்த பாரதம் – 2047 என்ற இலக்கை நோக்கி பயணிப்போம் என நயினார் நாகேந்திரன் தெரிவத்துள்ளார்.
















