பாரத பிரதமர் மோடியின் 76வது பிறந்தநாளை ஒட்டி நாடு முழுவதும் ஆசீர்வாத தீபங்கள் ஏற்றப்பட்டன.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டி வீடுதோறும் ஆசீர்வாத தீபம் ஏற்றுமாறு நாட்டு மக்களுக்கு பாஜக அழைப்பு விடுத்தது.
அதன் ஒருபகுதியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆசீர்வாத தீபம் ஏற்றி பாரத மாதா புகைப்படத்திற்கு ஆராதனை செய்தார். விஸ்வ உமியதாம் பகுதியில் 76, 000ம் விளக்குகள் ஏற்றப்பட்டன. இந்த நிகழ்வில் திரளான பாஜகவினர் கலந்து கொண்டனர்.
இதேபோல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தீபம் ஏற்றி பிரதமர் மோடியின் சிறந்த ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். அப்போது பேசிய அவர், பிரதமரின் தலைமையின்கீழ் இந்தியாவை மேலும் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான உறுதிமொழி வலுப்பெற வேண்டும் எனவும் கூறினார்.
ஹரியானா மாநிலம் குருச்சேத்திரத்தில் உள்ள புனிதமான பிரம்ம சரோவர் ஏரிக்கரையில் சேவா சங்கல்ப் அபியான் நிகழ்வு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நயாப் சிங் சைனி கலந்து கொண்டு ஆசீர்வாத தீபம் ஏற்றியதுடன் தீபாராதனை காட்டியும் வழிபாடு நடத்தினார்
















