2047ம் ஆண்டில் உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கு என, மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சுவாமி தரிசனம் செய்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 2047ம் ஆண்டில், உலகத்திற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் இலக்கு என்றும், மீண்டும் அவரே பிரதமராக வர வேண்டும் என பிரார்த்தனை செய்ததாகவும் தெரிவித்தார்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் பகுதியாக நிறைவு பெற்ற நிலையில், திறப்பு தொடர்பாக மாநில அரசு நேரம் கேட்கும் பட்சத்தில், விரைவில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து நேரம் ஒதுக்கப்படும் என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.
















