நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால், பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு ஆயிரத்து 238 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனால், 143 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 83 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.