ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள வணிக வளாகமொன்றில், இரு குழுக்களைச் சேர்ந்த 10 பேர் ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் பலர் காயமடைந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.