சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 32 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த நெகிழ்ச்சியான தருணம் நிகழ்ந்துள்ளது.
கொளத்தூர் பகுதிக்கு உட்பட்ட சத்யா நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் 32 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தனர்.
இந்த நிகழ்வில், காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இலந்தை வடை, ஜவ்வு மிட்டாய், கல்கோனா, குச்சி மிட்டாய், பொரி உருண்டை ஆகியவற்றை முன்னாள் மாணவர்கள் சுவைத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அப்போதைய நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.