கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட வால்மார்ட் சுமார் ஆயிரத்து 500 தொழில்நுட்ப ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதனை அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி சுரேஷ் குமார் ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் குமார் கடந்த ஆண்டு சுமார் 16 மில்லியன் டாலர்களைச் சம்பளமாகப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதனை வைரலாக்கி வரும் நெட்டிசன்கள், கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் தலைமை பொறுப்பிலிருப்பவர்கள், பிறரின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொள்ளாமல் அதிரடி பணி நீக்கத்தில் ஈடுபட்டு வருவதாகப் புலம்பி வருகின்றனர்.