கடும் பொருளாதார நெருக்கடியால் வங்கதேசம் உணவுப் பஞ்சத்தை நோக்கிப் பயணிப்பதாக அந்நாட்டு வணிக அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
நாடு முழுதும் வெடித்த வன்முறையை அடுத்து, வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறினார்.
இதையடுத்து அந்நாட்டில் பொருளாதார நிபுணர் முஹமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இந்த நிலையில், கடும் உணவுப் பஞ்சத்தை நோக்கி வங்கதேசம் பயணிப்பதாக வணிக அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
தொழிற்சாலைகள் மூடல், வேலையில்லா திண்டாட்டம், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் தடுமாறி வரும் வங்கதேசத்தில் இடைக்கால அரசு செயலற்ற நிலையில் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளன.
மேலும், வங்கதேசத்தின் பொருளாதார நெருக்கடி 1971ம் ஆண்டு நிலையைப் போல உள்ளதாகவும் அந்நாட்டு வணிக அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.