குஜராத் மாநிலம், காந்திநகரில் வாகனப் பேரணியில் ஈடுபட்ட பிரதமர் மோடியை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் திங்கள்கிழமை முதல் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் மாநாட்டு மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக பிரதமர் மோடி வாகன பேரணியில் ஈடுபட்டார்.
அப்போது திறந்தவெளி வாகனத்தில் சென்ற பிரதமருக்குச் சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மூவர்ணக் கொடியுடன் வரவேற்பு அளித்தனர்.
வாகனப் பேரணியில் பிரதமருடன் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலும் கலந்துகொண்டார். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப்பிறகு முதல் முறையாகத் தனது சொந்த மாநிலத்துக்குச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது .