திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி ஆயிரத்து 8 கலச யாக பூஜை விமர்சையாக தொடங்கியது.
கலச யாக பூஜையில் ஆயிரத்து 8 கலசங்கள் வைக்கப்பட்டு, சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க, பல்வேறு மூலிகை பொருட்கள் யாகசாலையிலிட்டு பூர்ணாகதி நடைபெற்றது. பின்னர், சரவிளக்கு மற்றும் பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது.
இந்த கலச யாக பூஜையானது தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளது. யாகத்தைத் தொடர்ந்து கலசங்களில் உள்ள புனிதநீர் மூலம் அண்ணாமலையாருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, சுவாமி வீதி உலா நடைபெறும்.