கேரளாவின் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் எனச் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகவும், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
திருச்சூர், மலப்புரம், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.