வருச நாடு வனப்பகுதிகளில் விடிய விடியப் பெய்த கனமழை காரணமாக மூல வைகை ஆற்றில் நீர்வரத்து காணப்படுவதால் மலைக் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள வருசநாடு வனப்பகுதிகளான ஓயம்பாறை, வால்பாறை, கோடாரிஊத்து உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்தது.
இதன் காரணமாகக் கடந்த ஒரு மாதமாக வறண்டு காணப்பட்ட மூல வைகை ஆற்றில் நீர்வரத்து காணப்படுகிறது. மூல வைகை ஆற்றில் நீர்வரத்து காணப்படுவதால், தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வந்த மலை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.