இந்தோனேசியாவில் பயங்கரமாக வெடித்த மராபி எரிமலையால் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்துள்ளது.
சாவகத் தீவில் அமைந்துள்ள இந்த எரிமலை, 1548-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெடித்து வருகிறது, மேலும் இது இந்தோனேசியாவில் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றாகும். அந்தவகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த எரிமலை வெடித்துச் சிதறியது. தொடர்ந்து வெளியேறி வரும் சாம்பல் மற்றும் கரும்புகையால் காற்று மாசுபட்டுள்ளது.