சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊத்தங்கரை வாசிப்பு இயக்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
நேபாள நாட்டில் நடந்த சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில், இந்தியா சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த 16 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில், 2 மாணவர்கள் தலா 3 போட்டிகளிலும், ஒரு மாணவர் 2 போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். சிலம்ப போட்டிகளில் மொத்தமாக, 10 மாணவர்கள் முதலிடமும், 10 மாணவர்கள் இரண்டாம் இடமும் பெற்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு ஊத்தங்கரை வாசிப்பு இயக்கம் சார்பில் பாராட்டு விழா விமரிசையாக நடைபெற்றது.